பக்தி மணம் பரப்பும்: நெய் நந்தீஸ்வரர் கோயில்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி எனும் ஊருக்குத் தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. இவ்வூர் நகரத்தார் அதிகமாக வாழ்கிற ஊர். ‘செட்டிநாடு ஊர்’ என்றே சொல்லலாம். இவ்வூரில் ஆறு கோயில் நகரத்தார் வாழ்கின்றனர். இந்த ஊரின் சிறப்பம்சம் - ஸ்ரீ நெய் நந்தீஸ்வரர். இவ்வூரில் உள்ள சிவன் கோயிலில் நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.

நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக அருள்பாலிப்பது இந்த ஊரில் மட்டுமே. இவ்வூரைச் சார்ந்த நகரத்தார் பெருமக்கள் பெருமுயற்சி செய்து இக்கோயிலைக் கட்டியுள்ளனர். இங்கே நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக வணங்கப்படுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE