மே 21 9148: ‘ஞான சௌந்தரி’ 75 ஆண்டுகள் | மூன்று படங்கள்... ஒரு வெற்றி!

By ஆர்.சி.ஜெயந்தன்

ரோமானிய நாட்டார் கதை மரபில் புகழ்பெற்றது ‘ரோடபிஸ்’ (Rhodopis) என்கிற இளவரசியின் கதை. சிற்றன்னையால் துன்பத்துக்கு ஆளாகும் ஒரு பிரபுவின் மகள், எதிர்பாராத அதிர்ஷ்டத்தினால் எகிப்தியப் பேரரசனை மணந்து அரசியாகும் கதை. அதுவே பின்னர் ஐரோப்பிய நாட்டார் கதை மரபில், ‘சிண்ட்ரெல்லா’வின் கதையாக (Cinderella story) மறுகூறல் வடிவத்தில் புகழ்பெற்றது. ‘உணர்ச்சிமயமான’ அக்கதை, உலகம் முழுவதும் பரவி, அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றம் பெற்ற நூற்றுக்கணக்கான ‘சிண்ட்ரெல்லா’ கதைகள் இருக்கின்றன.

தென்னகத்திலும் புகழ்பெற்ற அப்படியொரு பழமையான ‘சிண்ட்ரெல்லா’ கதையே ‘ஞான சௌந்தரி அம்மாள் விலாசம்’. தமிழ் நாடக மரபில் 200 ஆண்டுகளுக்கு முன்பே தெருக்கூத்தாக நிகழ்த்தப்பட்டுப் புகழ்பெற்றது. அதன்பின்னர் சங்கரதாஸ் சுவாமிகள் அதிலிருந்த பாடல்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்து, எளிய நடையில் உரையாடல் மிகுந்த நாடகமாக ‘ஞான சௌந்தரி’யை அரங்கப் பிரதியாகப் பயிற்றுவித்தார். அதில் சில மாற்றங்கள் செய்து மேடையேற்றினார் நவாப் ராஜமாணிக்கம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE