அண்மைக் காலமாக ‘மர்மமான முறையில் மயில்கள் இறந்து கிடக்கின்றன' என்ற செய்திகளை அதிகமாகக் கவனிக்க முடிகிறது. முருகனின் வாகனம், அதைக் கும்பிடுவது போன்ற செயல்பாடுகளோடு முடிந்துவிடுகிறது நமது அக்கறை. இவற்றைத் தாண்டி மயில்கள் கொல்லப்படுவது ஏன் கண்டுகொள்ளப்படாமல் போகிறது? காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972இன் படி மயில்களை கொல்வது தண்டனைக்குரிய குற்றம்.
என்னுடைய ஆய்வின் ஒரு பகுதி மயில்களின் இறப்பு பற்றியது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மயில்களின் இறப்பு பற்றி தொலைபேசித் தகவல் கிடைத்தது. அதுவும் அவை இறந்து ஒரு சில மணி நேரத்தில். உடனடியாகச் சம்பவம் நடந்த இடத்தைப் பற்றி விசாரித்து அந்த இடத்துக்குப் புறப்பட்டோம். கருமத்தம்பட்டி வரை ஓட்டுநருக்கு வழி தெரிந்திருந்தது. அதற்குப் பிறகு ‘மயில் இறந்த காடுவெட்டிப்பாளையம் தோட்டம் எங்க இருக்குங்கண்ணா?' என்று ஆங்காங்கே வழிகேட்டுக் கொண்டே மாலை ஐந்து மணி அளவில் சென்றடைந்தோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்