உள்ளாட்சியில் அதிகாரத்தைப் பிடிக்க, ஒரு சிறு நகரத்தில் முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ள சில குடும்பங்களின் கதையைக் காட்டுவதுபோல், மாநில அளவில், கடந்த கால, தற்கால அரசியலின் களத்தை நினைவூட்ட முயன்றுள்ளார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். இணையத் தொடர்களின் தனித்துவம் அவற்றின் சுதந்திரமான கதை சொல்லும் முறை. ஆனால், ‘செங்களம்’ என்கிற இணையத்தொடர் ஒரு வணிக சினிமாவுக்குரிய சட்டகத்துடன் ஒவ்வொரு எபிசோடாக நகர்ந்து செல்கிறது.
ஜீ 5 ஓடிடி தளத்தின் ஒரிஜினல் வரிசையில் வெளியாகியுள்ள இத்தொடர், விருதுநகரின் உள்ளாட்சி அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தை கதைக் களமாக்கியிருக்கிறது. விருதுநகர் நகர்மன்றத் தலைவர் பதவியை தங்களது ஏகபோக நாற்காலியாக 40 அண்டுகளாக கைவசம் வைத்திருக்கிறது ஒரு குடும்பம். அப்பதவியில் எப்பாடு பட்டாவது ஒட்டிக்கொண்டிருந்த தலைவர், இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பின் இறந்துவிடுகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்