இரு வரித் திருக்குறள் ஒன்றின் ஆன்மாவையும் 30 நொடி விளம்பரம் ஒன்றின் மூலம் பெற்ற தாக்கத்தையும் வைத்துக் கொண்டு, விலகல் இல்லாத ஒரு திரைப்படத்தை உருவாக்குவது சாத்தியமா? சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.
அறத்துப்பால் அதிகாரத்தில் நிலையாமை, பிறப்பு குறித்து எடுத்துக்காட்டும் ‘உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி / விழிப்பது போலும் பிறப்பு’ என்கிற அந்தக் குறள்தான் படத்தின் மையச் சரடு. அதேபோல் 2005இல் வெளிவந்த ‘கிரீன் பிளைவுட்’ விளம்பரத்தில், பெற்றோருடன் பேருந்தில் சுற்றுலா வரும் ஒரு சீக்கியச் சிறுவன், ஜன்னலுக்கு வெளியே கண்ணில் பட்ட ஒரு செட்டிநாட்டு பங்களாவைப் பார்த்துவிட்டு திடீரென்று தமிழில் பேசியபடி இறங்கி ஓடுவார். அந்த விளம்பரத்தின் பொறியை, திருக்குறளின் ஆதாரக் கருத்துடன் தோய்த்தெடுத்த இருமொழிக் கலாபூர்வம் இப்படைப்பு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்