மத்திய அரசு துறையில் 577 பேருக்கு வேலை.. பயோடேட்டாவை தயார் பண்ணுங்க!

By ராகா

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 577 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

அமலாக்க அதிகாரி (Enforcement Officer / Accounts Officer) : 418

உதவி ஆணையர் (Assistant Provident Fund Commisioner) : 159

மொத்தக் காலிப்பணியிடங்கள்: 577

தகுதி:

இந்தக் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அமலாக்க அதிகாரி பதவிக்கும், உதவி ஆணையர் பதவிக்கும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு யு.பி.எஸ்.சி. இணையதளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.upsconline.nic.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ. 25/-ஐ செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பங்களை மார்ச் 17ஆம் தேதி மாலை 6 மணிக்குள் இணைய வழியில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 18 முதல் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

தேர்வு மையம்:

இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் ஒரு தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.upsc.gov.in/sites/default/files/Spl-Advt-No-51-2023-engl-250223.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE