கடந்த வாரம் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) சார்ந்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். எம்எஸ்எம்இ நிறுவனங்களிடமிருந்து பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்கும் நிறுவனங்கள், அதற்கான பாக்கி தொகையை 45 நாட்களுக்குள் வழங்கி விட வேண்டும். இல்லையென்றால், அந்தத் தொகைக்கு வரி விலக்குக் கிடையாது என்று அவர் கூறினார்.
இதற்காக, வருமான வரி சட்டப்பிரிவு 43பி-ல் திருத்தம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். முதலீடு ரூ.1 கோடிக்குள் அல்லது ஆண்டு வருவாய் ரூ.5 கோடிக்குள் இருந்தால் குறு (Micro) நிறுவனம் என்றும், முதலீடு ரூ.10 கோடிக்குள் அல்லது ஆண்டு வருவாய் ரூ.50 கோடிக்குள் இருந்தால் சிறு (Small) நிறுவனம் என்றும், முதலீடு ரூ.50 கோடிக்குள் அல்லது ஆண்டு வருவாய் ரூ.250 கோடிக்குள் இருந்தால் நடுத்தர (Medium) நிறுவனம் என்றும் வகைப்படுத்தப்படுகிறது. ரூ.250 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் கொண்
டிருக்கும் நிறுவனங்கள் பெரிய நிறுவனங்கள் என்று வரையறுக்கப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
13 hours ago
இணைப்பிதழ்கள்
17 hours ago
இணைப்பிதழ்கள்
22 hours ago
இணைப்பிதழ்கள்
22 hours ago
இணைப்பிதழ்கள்
23 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago