குடும்பச் சட்டம்: கியூபா காட்டும் பாதை

By செய்திப்பிரிவு

கியூபப் புரட்சியாளர் சேகுவேராவின் மகள், மருத்துவர் அலெய்டா குவேரா ஒரு மாத காலப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். கடந்த ஜனவரி 17, 18 ஆம் தேதிகளில் சென்னைக்கு வந்திருந்தார். அமெரிக்காவில் இருந்து 144 கி.மீ தொலைவில் கரீபியன் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித் தீவு கியூபா. அதன் மக்கள் தொகை 1 கோடியே பத்து லட்சம் மட்டுமே. தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் எட்டில் ஒரு பங்கு. கடந்த 60 ஆண்டுகளாக கியூபா மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்துவருகிறது. 2022ஆம் ஆண்டில் கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார, வர்த்தகத் தடைகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா ஒரு தீர்மானம் கொண்டுவந்தது. இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளைத் தவிர, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஆதரித்து வாக்களித்தன. என்றாலும் அமெரிக்கா தனது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. தன்னுடைய இந்தப் பயணத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைச் சமாளித்து, சோஷலிசத் தன்மையோடு தற்சார்புடன் இருப்பதற்காக கியூபா நட த்திவரும் போராட்டம் பற்றிப் பேசினார் அலெய்டா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE