காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்கதையாக நீண்டுகொண்டிருக்கிற நிலையில், பிஹாரைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள் பேசுபொருளாகியுள்ளனர். ஜூஹி குமாரி, சாந்தி குமாரி ஆகிய இருவரும் பிஹாரின் ஹாஜிபூர் பகுதியில் உள்ள உத்தர் பிஹார் கிராம வங்கியின் வாயிலில் காவல் பணியில் இருந்தனர். அப்போது மூன்று ஆண்கள், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்களை விசாரித்தபோது, மூவரில் ஒருவர், தன்னிடமிருந்த துப்பாக்கியைக் காட்டி, பெண் காவலர்களை மிரட்டினார். துப்பாக்கியைக் கண்டு பயந்து பின்வாங்காத இருவரும் கொள்ளையர்களைத் தாக்க, அவர்கள் தப்பியோடினர். ஜூஹி, சாந்தி இருவரும் கொள்ளையர்களிடம் சண்டையிட்ட காணொலி கடந்த வாரம் வைரலானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்