உலகின் எல்லா மதங்களும் ஒளியை முன்நிறுத்துகின்றன. சிறந்த முன்மாதிரியாக இருப்பவர்களை, வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளியாகப் பார்க்கிறோம். கிறிஸ்துவப் பெருமதத்தில் ஒளியின் வடிவமாகப் பார்க்கப்படுகிறவர் இறைமகன் இயேசு. அவர் காட்டிய வழியில் அவரை நோக்கிய பயணமே சிறந்த ஆன்மிக வாழ்க்கை என்பதில் உலகின் பல பிரிவு கிறிஸ்துவர்கள் ஆழமான நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஏனென்றால், “நான் இந்த உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிற யாரும் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டார்கள், ஆனால் வாழ்வு தரும் ஒளியைப் பெற்றிருப்பார்கள்” (யோவான் 8:12) என்று தன்னைத் தேடிப் பின்தொடர்ந்த மக்களிடம் சொன்னார். அதேபோல், தன்னை விமர்சித்த யூதப் பழமைவாதிகளிடம்: “கடவுள்தான் உங்கள் தகப்பன் என்றால், நீங்கள் என்மேல் அன்பு காட்டுவீர்கள். ஏனென்றால், நான் கடவுளிடமிருந்து இங்கே வந்திருக்கிறேன். நான் சுயமாக வரவில்லை, அவர்தான் என்னை இங்கே அனுப்பினார். நான் சொல்வதை ஏன் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்?” (யோவான் 8:42) என்று கேட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்