பூமியில் இயற்கை வளங்கள் வேகமாக குறைந்து வருவதுடன் பருவநிலையும் வியக்கத்தக்க வகையில் மாறி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்பது மிகப்பெரிய கவலைக்குரியதாகி உள்ளது. வரும் காலத்தில் மனிதர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு உணவுப்பொருட்கள் 75 சதவீதம் காரணமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்துக்கு உணவுத் துறை நிபுணர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில்தான் அதிக புரோட்டீன் சத்துகளைக் கொண்ட தாவர உணவுகளை (ஸ்மார்ட் புரோட்டீன்)உருவாக்கி உள்ளனர். அதாவது, தாவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கும் இந்த உணவுப்பொருட்கள் தோற்றத்திலும் சுவையிலும் விலங்கு இறைச்சி போலவே இருக்கும். தாவர புரோட்டீன் வளர்ந்த நாடுகளில்தான் முதலில் உருவானது. ஆனால் இப்போது இந்தியாவிலும் இது கால் பதித்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்