பாப்கார்ன்: ஏடிஎம்மில் இட்லி வருமா?

By செய்திப்பிரிவு

அண்மையில்தான் தோசையைச் சுட்டுத் தள்ள பிரின்டர் போன்ற இயந்திரம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்போது இட்லியைச் சுட்டுத் தள்ள ‘இட்லிபாட்’ எனும் ரோபாட் இட்லிப் பானை வந்துவிட்டது. இதை வடிவமைத்துள்ள பெங்களூருவைச் சேர்ந்த பொறியாளர், தன்னுடைய மகளுக்காகக் கடைகடையாக அலைந்து திரிந்தும் இட்லி கிடைக்காததால், இந்த இட்லிபாட்டை வடிவமைத்திருக்கிறார். இது ஏடிஎம் போல இட்லியைத் தரும் இயந்திரம். இந்த இயந்திரத்தில் இட்லி மாவை ஊற்றி வைத்திருப்பார்களாம். இட்லி தேவைப்படுவோர் ஏடிஎம்மில் இருக்கும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பட்டனைத் தட்டினால் சுடச்சுட இட்லி வார்த்துத் தந்துவிடுமாம். ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ என்கிற தொழில்நுட்பத்தில் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். இட்லி மட்டுமல்ல, சட்னி சாம்பாரையும் சேர்த்து பார்சல் செய்து தருமாம் இந்த இயந்திரம். இப்படித் தயாரிக்கப்படும் இட்லிகள் ஜோடி ரூ.25க்கு விற்கப்படுகின்றன. இட்லிக்கடை ஆயாமார்கள், தள்ளுவண்டி கடைகளோடு போட்டிபோடாமல் இருந்தால் சரி!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE