சமீபத்தில் வெளியான ‘அர்ச்சனா 31 நாட் அவுட்’ என்கிற மலையாள படத்திற்கு நல்ல வரவேற்பு. 30 கடந்து 31ஆவது வரன் அமைய, அர்ச்சனாவுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எதிர்பாராத ஒரு சம்பவத்தால் கடைசி நேரத்தில் திருமணம் ரத்தாக, அந்தச் சூழலை அவர் எப்படிக் கையாண்டார் என்பதே படத்தின் கதை. இதே போன்றதொரு உண்மை சம்பவம் பிரிட்டன் நாட்டில் அரங்கேறியுள்ளது. கடைசி நேரத்தில் திருமணத்திற்கு வராமல் காதலன் பின்வாங்கியதால் 27 வயது ‘கேலி’ என்கிற பெண் ஏமாற்றம் அடைந்திருக்கிறார். பல லட்சம் செலவிட்டு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியை ரத்து செய்ய மனம் வராமல், நண்பர்கள் உறவினர்கள் அளித்த உற்சாகத்தால் கண்ணீரை மறந்து பிரிவைக் கொண்டாடி இருக்கிறார் ‘கேலி’. பெரும்பாலும் திரையில் காட்டப்படுவது நிஜ வாழ்வுக்குப் பொருந்தாது என்றிருக்கையில், ‘கேலி’யின் இந்தச் செயலுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்