குடியரசுத் தலைவர் தேர்தல் டைரி 2007: இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர்!

By டி.கார்த்திக்

இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் நிறைவடைய இருந்த காலத்தில் பெண்களில் ஒருவர்கூடக் குடியரசுத் தலைவராக இருந்ததில்லை என்கிற குறை இருந்துவந்தது. பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவரானதன் மூலம் அந்தக் குறை தீர்ந்தது.

2007ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தபோது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. பிரதமராக மன்மோகன் சிங் இருந்தார். அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க காங்கிரஸ் விரும்பவில்லை. எனவே, குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கியபோது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக இருப்பார் என்கிற கேள்வி எழுந்தது. பிரணாப் முகர்ஜி, சிவராஜ் பாட்டீல், சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்ட சிலரது பெயர்கள் அடிபட்டன. ஆனால், பெண் ஒருவரை நிறுத்த சோனியா காந்தி விரும்பினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE