1970ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ்வரை நான்கு தலைமுறை தமிழர்களுக்கு மகிழ்ச்சி, பரவசம், பரிவு, காதல், ஏக்கம். சோகம். துயரம், வலி, வேதனை என எண்ணற்ற உணர்வுகளை வெளிப்படுத்த இளையராஜாவின் இசையில் அமைந்த ஏராளமான பாடல்கள் பயன்பட்டுள்ளன. குறிப்பாக இளையராஜாவின் சோகப் பாடல்களுக்கென்றே ஒரு தனித்த முக்கியத்துவம் உண்டு. காதல் தோல்வி, நெருங்கிய உறவினர் அல்லது நண்பரின் மரணம், உறவு அல்லது நட்பு முறிவு போன்ற சோகமான தருணங்களின் வலியை அசைபோடவும் ஆற்றிக்கொள்ளவும் இளையராஜாவின் இசை முக்கியப் பங்கு வகித்துள்ளது. ’ஜான்பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளைதானன்றோ’ (ஆறிலிருந்து அறுபதுவரை), ’ஊரத் தெரிஞ்சுகிட்டேன்’ (படிக்காதவன்), ‘தென்பாண்டிச் சீமையிலே’ (நாயகன்), ‘உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’ (அபூர்வ சகோதரர்கள்), ’சின்னத் தாயவள்’ (தளபதி), ‘என் தாயென்னும் கோயிலைக் காக்க மறந்திட்ட’ (அரண்மனைக் கிளி), ‘நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா’ (பாரதி), ’உன் குத்தமா என் குத்தமா’ (அழகி) என இளையராஜாவின் இசையில் அமைந்த சோகப் பாடல்கள் பலவும் கேட்கும்போதே கண்ணிர் சிந்த வைப்பவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்