பனி போர்த்திய மூணாறு நகரம். சுற்றுலாப் பயணிகள் குவியும் மையப் பகுதி அது! மின்னொளியின் உதவியால் கடைத் தெருக்கள் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன! நகரெங்கும் வெண்ணிறப் பனி விரவிக்கொண்டிருந்தது. சாலையில் நடப்பவர்கள் அடிக்கடி கைகளைத் தேய்த்துச் சூடேற்றிக்கொள்வதைப் பார்க்க முடிந்தது. தேநீர்க் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
குளிர்காலமாக இருப்பினும் சுற்றுலாப் பயணிகள், ஊர்மக்களின் புழக்கம் அப்பகுதியை மும்மரமாக வைத்திருந்தது. சாலையோரத்தில் நிறைய துணிக்கடைகள். டிசம்பர் மாதம் என்பதால் கம்பளி ஆடைகள் விற்பனை ஆகும் கடைகளில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. துணிக்கடைகள் தவிர்த்து பழக்கடைகள், கலர் கலர் இனிப்புக் கடைகள் என அங்காடித் தெரு நிரம்பி வழிந்தது. நறுமணமூட்டிகள் நிறைந்த வாசனைமிக்க கடைகளும் வரிசைகட்டி நின்றுகொண்டிருந்தன!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்