சோடா, கலர் பாட்டிலில் குளிர்பானத்தைப் பருகியிருப்பீர்கள். பாட்டிலின் மேலே உள்ள மூடியைத் திறக்க என்ன செய்வீர்கள்? ஓபனரை வாங்கித் திறப்பீர்கள் அல்லது பல்லால் கடித்துத் திறப்பீர்கள். மூடியைத் திறந்த பிறகு தூரப் போடுவீர்கள். அந்த மூடியின் பின்னால் உள்ள கதையில் பயணிப்போமா?
காற்றுகூடப் புக முடியாத அளவுக்குப் பாட்டிலை இறுக்கமாக மூடியிருக்கும் மூடி மட்டும் இல்லாவிட்டால் குளிர்பானங்களைப் பத்திரமாக உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்ல முடியுமா? நிச்சயம் முடியாது. சோடா, கலர் பாட்டிலைப் பல இடங்களுக்கும் அனுப்ப உதவியது மூடிதான். இந்த மூடியின் கண்டுபிடிப்பில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதைப் புரட்சிகரமான கண்டுபிடிப்பு என்று சொல்லலாம். ஏனெனில், இந்த மூடி கண்டுபிடிப்பதற்கு முன்பாக சோடா பானங்களை வெளியிடங்களுக்கு அனுப்ப ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்கள். அந்தச் சிரமத்தைக் களைந்த பெருமைக்குச் சொந்தக்காரர் அயர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் பெயிண்டர். இவர் ஒரு பொறியாளர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்