உலகப் பெருங்கடல்கள் நாள் - கடல்களைக் காப்போம், பேரழிவைத் தடுப்போம்

By நிஷா

உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) உலகம் முழுவதும் பெரும் விமரிசையுடன் நேற்று கொண்டாடப்பட்டது. கடல் பாதுகாப்பு, அதன் சூழலின் முக்கியத்துவம் போன்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உலகின் பெருங்கடல்களைப் பாதுகாக்கும் முன்னெடுப்புகளில் ஈடுபடுவதே இந்த நாளின் நோக்கம். ஆண்டு தோறும் ஜூன் 8-ஆம் தேதி 'உலகப் பெருங்கடல்கள் நாள்' உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

விளைநிலத்திற்கு நதிநீரின் முக்கியத்துவம் எப்படியோ அதேபோல் கடல் வாழ் உயிரினங்களுக்கும் கடல் நீரோட்டம் மிகவும் முக்கியமானது. 1980இல் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த என்ரிக் ஜொர்மிலோ என்பவர் புவி வெப்பமாதலால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன, அதன் காரணமாகக் கடல் நீரோட்டங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவருகிறது என உலகுக்கு எடுத்துரைத்தார். இதை முதல் முதலாக என்ரிக் கூறியபோது, அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை; நம்பவில்லை என்று கூடச் சொல்லலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE