ஸ்டார் டைரி: ஒய். வி. ராவ் | சினிமாவைப் பற்றி முதல் சினிமா எடுத்தவர்!

By ஆர்.சி.ஜெயந்தன்

சலனப் படக் காலத்திலேயே நாயக நடிகராகப் புகழ்பெற்றார் இவர். பின்னர் பேசும் படங்கள் வந்த பின் ‘சிந்தாமணி’ என்கிற தமிழ் சினிமாவின் முதல் பிளாக் பஸ்டர் வெற்றியைக் கொடுத்தார். அந்தப் படத்தில் சாதிய ஏற்றத் தாழ்வுகள், செய்யும் தொழில் ரீதியாக ஒருவரை ஒடுக்குவது ஆகியவற்றுக்கு எதிராகப் புரட்சிகரமான காட்சிகளையும் வசனங்கள், பாடல்களை வைத்து தான் சார்ந்திருந்த சமூகத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார். அந்தப் படத்தின் நாயகன் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ஆனார். அன்று சினிமாவின் 24 கலைப் பிரிவுகளிலும் இவர் நுழைந்து வராத துறையே இல்லை. இவையெல்லாம் போதாதென்று சினிமா உலகத்தையே கதைக் களமாகக் கொண்ட திரைப்படத்தை தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக எடுத்தார்! அதுவும் எந்தக் காலத்தில் என்கிறீர்கள்?! எல்லோரும் புராணப் படங்களையும் தேசபிமானம் மிகுந்த படங்களையும் எடுத்துக்கொண்டிருந்தபோது ‘விஷ்வமோகினி’ என்கிற அந்தப் படத்தை எடுத்தார். அதுமட்டுமல்ல; தாமே எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்த படத்தில் (லவங்கி - 1946), தனக்கு ஜோடியாக நடித்த கதாநாயகியை காதலித்துத் திருமணமும் செய்துகொண்டார். அந்த அதிரடிக்காரர், இன்று 119-வது பிறந்த நாள் காணும் ஒய்.வி. ராவ் என்று அழைக்கப்பட்ட எறகுடிப்பட்டி வரத ராவ்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்