இந்தியாவில் முறைசார் கல்வி கற்கும் அனைவரும் மழலையர் வகுப்புகளிலிருந்தே ஆங்கில மொழியைக் கற்கிறோம். ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக மட்டுமல்லாமல் அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படும் ஆங்கிலவழிக் கல்வியையே பெரும்பாலானோர் நாடுகின்றனர். அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பலர் கல்விக்காகவும் பணி/தொழில்ரீதியான தேவைகளுக்காகவும் சுய விருப்பம்/ஆர்வத்தின் அடிப்படையிலும் ஆங்கில நூல்கள் பலவற்றை வாசிக்கிறார்கள். ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வதற்காகவே தினமும் ஆங்கில நாளிதழ்கள், பருவ இதழ்களை வாசிக்கும் பழக்கமும் பலரிடம் உள்ளது. ஆனால், இவ்வளவு முயற்சி எடுத்து ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொள்கிறவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசமுடிவதில்லை. சிறு வயது முதலே ஆங்கிலம் பயிலும் பலர் ஆங்கிலம் பேசத் தடுமாறுவதே யதார்த்தம். எவ்வளவு மேம்பட்ட ஆங்கிலத்தையும் படித்துப் புரிந்துகொள்ளவும் தவறில்லாமல் எழுதவும் இயன்றவர்கள்கூடத் தம்மால் ஒரு சில நிமிடங்களுக்குக்கூடத் தொடர்ச்சியாகப் பிழையின்றி ஆங்கிலத்தில் பேச முடியாமல் போவதையும் ஆங்கிலத்தில் பேசும்போது உரிய சொற்கள் நினைவுக்கு வராமல் திக்கித் திணறுவதையும் உணர்ந்திருப்பர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்