டி.எம்.எஸ். நினைவு நாள்: இசையைப் பாடிய மூன்றெழுத்து

By வா.ரவிக்குமார்


‘இசையால் வசமாகா இதயம் எது?’ என்னும் கேள்வி மூன்று முறை எதிரொலிக்கும். அதன்பின், அதற்கான பதிலாக ‘இசையால் வசமாகா இதயம் எது / இறைவனே இசை வடிவம் எனும்போது தமிழ் இசையால் வசமாகா இதயம் எது..’ எனப் பாடல் வளரும். இசையையும் இறையையும் ஒரே தராசில் நிறுத்திப் பார்க்கும் இந்தப் பாடலை கீதப்ரியன் எழுதியிருப்பார். இந்தப் பாடலின் மூலமாக இசையின் நுட்பங்களைத் தம்முடைய காத்திரமான குரலில் அடுக்கடுக்காக அலசியிருப்பார் டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் கேட்பவர்கள் இறைவனிடமும் இசையிடமும் ஒருங்கே வசமாகிவிடுவார்கள்.

‘கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் எஸ்.வி.சுப்பய்யா நாயுடு இசையில் ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதடி’ என்னும் பாடலைப் பாடி தமிழ்த் திரையுலகில் அறிமுகம் ஆனார் டி.எம்.எஸ். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய சில மொழிகளிலுமாக மொத்தம் 10,000 பாடல்களுக்கும் அதிகமாகப் பாடியிருக்கிறார். தவிர, சுமார் 2,500 தனி, பக்திப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE