ஸ்டார் டைரி: எம்.வீ.ராஜம்மா | கர்நாடகம் தந்த முதல் கதாநாயகி! | பாகம் 1

By ஆர்.சி.ஜெயந்தன்

‘கன்னடத்துப் பைங்கிளி’ சரோஜா தேவி முதல் இன்றைய ராஷ்மிகா மந்தனா வரை கன்னட சினிமா, தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகிகளை வாரி வழங்கி வந்திருக்கிறது. அவர்களில் எத்தனையோ பேர் இங்கே புகழையும் பொருளையும் ஈட்டியிருந்தாலும், முதன் முதலில் கணக்கைத் தொடங்கியவரின் பெயர் எப்போதும் நினைவுக் கூறப்படும். கன்னட சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த முதல் கதாநாயகி எம்.வீ.ராஜம்மா.

யாரிந்த ராஜம்மா என்று கேட்பவர்களுக்கு ஒரு பிரபலமான உதாரணம்: தமிழ் சினிமாவில், கதாநாயகன் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படமான ‘உத்தம புத்திர’னில் (1940) பி.யூ.சின்னப்பாவுக்கு ஜோடியாக நடித்தாரே அதே ராஜம்மாதான். வேறொரு மொழிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் ‘ராசி’யான கதாநாயகியாகச் சரசரவென்று வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றவர் மட்டுமல்ல; தன்னுடைய தமிழ்த் திரையுலகப் பயணத்தின் தொடக்கத்திலேயே ‘பெண் மையக் கதை’களில் நடித்த அதிர்ஷ்டமும் ராஜம்மாவுக்கு உண்டு. இவருடைய மற்றொரு ‘முதல்’ சிறப்பு, எடுத்த எடுப்பிலேயே மூன்று மொழிகளில் நடித்தது. ‘சம்ஸார நௌகா’ என்கிற கன்னடப் படத்தில் அறிமுகமான ராஜம்மா, இரண்டாவதாக ‘கிருஷ்ண ஜராஸந்தா’ என்கிற தெலுங்குப் படத்தில் நடித்தார். மூன்றாவதாக ‘யயாதி’ என்கிற தமிழ்ப் படத்தில் நடித்து தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு மூன்று மொழிகளிலுமே பிரபலமானாலும் எம்.வீ.ராஜம்மா அதிகமாக நடித்தது தமிழில்தான்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE