தமிழகத்தில் மாம்பழ சீசன் களைக் கட்டத் துவங்கியுள்ள நிலையில், மாம்பழங்களை நாடிச் செல்லும் மக்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மக்களின் நாட்டத்தை உடனடி காசாக்கும் பேராசையில் சில வியாபாரிகள், மாம்பழத்தை கார்பைடு கல் மூலம் செயற்கையாகப் பழுக்க வைத்து விற்பது ஒவ்வோர் ஆண்டும் நடந்துவருகிறது. அந்த மாம்பழங்களைச் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுவலி, அஜீரண கோளாறு உள்ளிட்ட உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்த வருகின்றனர். இருப்பினும், அந்த நடைமுறை நின்றபாடில்லை. இந்தாண்டும் அது தொடர்கிறது என்பதை நேற்று கோயம்பேடு சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் உணர்த்துகின்றன. ஆம், கோயம்பேடு சந்தையில் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட 8 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் நேற்று பறிமுதல் செய்து இருக்கின்றனர். அரசங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் சூழலில், பொதுமக்களாகிய நமக்கும் எது இயற்கையாகப் பழுத்த மாம்பழம், எது செயற்கையாகப் பழுத்த மாம்பழம் என்பதைக் கண்டறியும் புரிதல் இருக்க வேண்டியது அவசியம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்