அதிவேக சார்ஜிங் வசதி இல்லாத ஸ்மார்ட்போன்கள் இன்று விற்பனையில் இல்லையென்றே சொல்லலாம். 30 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜ், ஒரு மணிநேரத்துக்குள் 100 சதவீத சார்ஜ் போன்ற ஸ்மார்ட்போன்களின் திறன் குறித்த விளம்பரங்கள் இன்று அதிகம் வெளிவருகின்றன. இத்தகைய விளம்பரங்களே வாடிக்கையாளர்களை அதிகமாகவும் கவர்ந்திழுக்கின்றன. காரணம், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அந்த அளவுக்கு அபரிமிதமாக உள்ளது.
பேசுவதற்கு மட்டுமே என்றிருந்த போன்கள், இன்று நம் வாழ்வின் அனைத்துமாகி இருக்கின்றன. சமூகத் தொடர்பு, பயணம், உணவு, திட்டமிடல், உடல் நலம், கேளிக்கை, பொழுதுபோக்கு போன்ற அனைத்தும் தற்போது ஸ்மார்ட்போனைச் சார்ந்தே இருக்கின்றன. இத்தகைய அபரிமிதப் பயன்பாட்டால், பேட்டரியின் ஆற்றல் விரைவில் தீர்ந்துவிடுகிறது. எதற்கும் நேரமின்றி ஓடும் இன்றைய அன்றாடத் துரித வாழ்வு, பெருமளவு ஸ்மார்ட்போன்களைச் சார்ந்து இருப்பதால், பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் உருவான தொழில்நுட்பமே, விரைவு சார்ஜிங்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்