அட்சய பாத்திரத்தின் அருமையை வங்கிகள் உணர்வது எப்போது?

By செய்திப்பிரிவு

அண்மையில் ஒரு பொதுத்துறை வங்கிக்குச் சென்றிருந்தபோது ஒரு பெண் என்னிடம் வந்து, தான் வங்கியில் ரூ.2.25 லட்சம் நகைக்கடன் வாங்கியதாகவும் கடன் தொகையில் ரூ.1,600 அளவில் பிடித்தம் செய்து பாக்கி கொடுத்திருப்பதாகவும் தெரிவித்து, ஏன் அந்தத்தொகை பிடிக்கப்பட்டது என்று விவரம்கேட்டார். நான் அவரது வங்கிக் கணக்குப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.

அப்பெண் அவ்வங்கியில் ரூ.70,000 மற்றும் ரூ.1,55,000 என இரண்டு நகைக்கடன்கள் பெற்றுள்ளார். ரூ.70,000 கடனுக்கு ரூ.350 மதிப்பீட்டாளர் கட்டணமும், ரூ.256 சேவைக்கட்டணம் மற்றும் வரியாகவும் பிடித்தம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல் ரூ.1,55,000 கடனுக்கு ரூ.500 மதிப்பீட்டாளா் கட்டணமும் ரூ.457 சேவைக்கட்டணம் மற்றும் வரியாகவும் பிடித்தம் செய்யப்பட்டிருந்தது. ஆக, ரூ.2.25 லட்சம் கடனுக்கு ரூ.1564 பிடித்தம் செய்யப்பட்டிருந்தது. இதை நான் அப்பெண்ணிடம் தெரிவித்த போது, “ஏனய்யா.. வட்டியை முதல்லேயே பிடித்துவிட்டார்களா” என்றார் அப்பாவியாய்! “இல்லை. இது நகை மதிப்பீட்டாளா் மற்றும் சேவைக்கட்டணம். கடனுக்கு வட்டி தனியாக செலுத்த வேண்டும்” என்றேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE