கரோனா வைரஸ்: கற்பிதங்களால் உயிரிழக்க வேண்டாம்!

By முகமது ஹுசைன்

நாவல் கரோனா வைரஸ் எப்படி உருவானது? அது எப்படிப் பரவுகிறது? அது எப்படி மனிதனைப் பாதிக்கிறது? அதிலிருந்து எப்படி மீள்வது ஆகியவற்றைக் கண்டறிய அறிவியல் உலகும் மருத்துவ உலகும் தொடக்கத்தில் தடுமாறித் திணறின. அந்தத் தருணத்தைப் போலிச் செய்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டன. கரோனா வைரஸ் குறித்தான மக்களின் அச்சத்தை அறுவடை செய்த அந்தச் போலிச் செய்திகள், அறிவியலின் வீச்சை, அதன் அடியாழ உண்மைகளைப் பின்னுக்குத் தள்ளின. எட்டுத்திக்கும் அதிவேகத்தில் பரவிய அந்தச் செய்திகள் அறிவியலின் உண்மைகளிலிருந்து மக்களை அந்நியப்படுத்தின.

இன்று அந்தப் போலிச் செய்திகள் நமக்கு நகைப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளன என்றாலும், அன்று அவை மக்கள் உயிரோடு விளையாடின என்பதே உண்மை. அறிவியலின் பலனை எவ்வித கேள்வியமற்று ஏற்றுக்கொள்ளும் மக்கள், அது கண்டறிந்து உணர்த்தும் உண்மைகளையும் அவ்வாறு ஏற்றுக்கொள்வது இல்லை என்பதை கரோனா பெருந்தொற்று காலம் நமக்கு மீண்டும் உணர்த்தி சென்றுள்ளது. மனித மனங்களின் முரண்களின் வழியே உள்ளே நுழைந்து பெருந்தொற்றின் அதிவேக பரவலுக்கும், மனிதர்களின் உயிரிழப்புக்கும் அடிக்கோலிட்ட சில போலி செய்திகள் குறித்த பார்வை இங்கே:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE