சேதி தெரியுமா?

By செய்திப்பிரிவு

பிப்.20: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. 16 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம் என 37 பதக்கங்களுடன் நார்வே பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

பிப்.21: இணையம் வழியாக நடைபெற்ற வரும் ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது வீரர் பிரக்ஞானந்தா உலகப் புகழ்பெற்ற செஸ் சாம்பியனான நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்செனைத் தோற்கடித்து சாதனை படைத்தார்.

பிப்.22: தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி வென்றது.

பிப்.23: உக்ரைன் மீது போர் நடவடிக்கைகளைத் தொடங்கும்படி ராணுவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.

பிப்.25: உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யா தோற்கடித்தது. இந்தத் தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை.

பிப்.26: பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒடிஷாவின் முதல் முதல்வர் ஹேமானந்தா பிஸ்வால் (82) காலமானார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், 1989 - 90, 1999 - 2000 காலகட்டத்தில் ஒடிஷா முதல்வராக இருந்தார்.

பிப்.26: நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்கும் நோக்கில் தானியங்கி வழிமுறை மூலம் 20 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE