‘விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன்டி' என்று 1949ஆம் ஆண்டு வெளியான ‘நல்லதம்பி’ திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. அதில் ‘நெல்லு குத்த மிஷின்’ வேண்டும் என்று பெண் கேட்பார். ‘அதர்மம்’ திரைப்படத்தில் வரும் ‘வம்புக்காரப் பாட்டி’ பாடலில் ‘உன்னோட காலத்தில நெல்லு குத்த, மாவரைக்க அன்னாடம் பொம்பளைங்க அவதிப் பட்டாங்க’ என்று வருகிறது.
இப்படி நெல் குற்றுதல் குறித்துப் பதிவுகள் ஆங்காங்கே இருந்தாலும், நெல் குற்றுதல் என்றால் என்ன? நெல்லிலிருந்து உமியை நீக்கி அதைச் சமைக்கும் அளவிற்கான அரிசியாக மாற்றும் செயல்தான் இந்த ‘நெல் குற்றுதல்.’ பணக்காரர்கள் வீடுகளில் இவ்வாறு நெல் குற்றுவதற் கென்றே வேலையாள்கள் இருந்திருக்கி றார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்