பொதுமக்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வது கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும் பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களுக்கு முதலீட்டாளர்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இத்தகைய திட்டங்களில் செய்த ஒட்டுமொத்த முதலீடு ரூ.72,542 கோடி. இதில் முதலீட்டாளர்கள் திருப்பி எடுத்தது (வித்ட்ரா) போக நிகர முதலீடு ரூ.38,239 கோடி ஆகும்.
பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர திட்டங்களில் இந்த ஆண்டில் ஜூன் மாதத்தில் ரூ.81,145 முதலீடு குவிந்தது. நிகர முதலீடு ரூ.40,608 கோடியாக இருந்தது. இதுதான் இதுவரை பதிவான அதிகபட்ச நிகர முதலீடு. அதன் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் 2-வது அதிகபட்ச அளவாக ரூ.38,239 கோடி நிகர முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்