ரூ.7,000 கோடி டெபாசிட் செய்துள்ள ஆசியாவின் பணக்கார கிராமம்

By செய்திப்பிரிவு

ஒருவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றால் அவரது குடும்பம் மட்டும் செல்வச் செழிப்பாக மாறுவது வழக்கமானதுதான். இதனை ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டுக்கு சென்றதால் தற்போது ஆசியாவிலேயே பணக்கார கிராமமாக அது மாறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குஜராத் என்றாலே அதற்கு தொழில் மாநிலம் என்ற மற்றொரு சிறப்பும் உண்டு.

இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களையும், அரசியல் வாதிகளையும் உருவாக்கிய பெருமை குஜராத்துக்கு உண்டு. உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர்கள் அம்பானி, அதானி இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதேபோன்று, சுதந்திரப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், அரசியல்வாதிகளான பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான். இப்படி பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ள குஜராத்தில் உள்ள ஒரு கிராமம்தான் தற்போது ஆசிய அளவில் பணக்கார கிராமமாக மாறி உலகின் கவனத்தை கவர்ந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE