தலைநகர் சென்னையில் ‘பேச்சிலர்களின்’ சொர்க்கபுரி எது? திருவல்லிக்கேணிதான் என்று உதடு உடனே உச்சரிக்கும். வாழ வைக்கும் நகரான சென்னையில் இளைஞர்களை ஆரத்தழுவி அரவணைத்துக் கொள்ளும் இடம் திருவல்லிக்கேணிதான். ஆம், வாழ்வாதாரத்துக்காகச் சென்னையைத் தேடிவரும் பலதரப்பட்ட இளைஞர்களுக்கும் திருவல்லிக்கேணியில் உள்ள ‘மேன்சன்’கள் ஒரு வேடந்தாங்கலைப் போல.
மேன்சனைத் தேடி... சென்னையில் மேன்சனில் தங்குபவர்கள் எல்லாருமே பேச்சிலர்கள் கிடையாது. ஆனால், பேச்சிலர்கள் நாடிவரும் இடமாக மேன்சன்களே இருக்கின்றன. ஏனெனில், சென்னையில் ஓர் இளைஞருக்கு வீடு கிடைப்பது என்பது குதிரைக்கொம்பு. அதனால்தான் படித்து முடித்துவிட்டு வேலைக்கோ அல்லது வேலை தேடியோ சென்னைக்கு வருவோருக்கு, எங்கு தங்குவது என்கிற கேள்வி தலைவலியாக இருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்