விளையாட்டில் விட்ட இடத்திலிருந்து பிடிப்பது என்பது சுவாரசியம் நிறைந்ததாகவே இருக்கும். அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் விட்ட பதக்கத்தை, பாரிஸ் ஒலிம்பிக்கில் பிடித்துப் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் மனுபாகர். இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான 22 வயது மனு பாகர், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்கிற மகத்தான சாதனையையும் சேர்த்தே படைத்திருக்கிறார்!
இளம் வயதில் சாதனை: சிறு வயதில் பார்க்கிற, விளை யாடுகிற எல்லா விளையாட்டுகள் மீதும் ஈர்ப்பு ஏற்படும். மனு பாகரும் அதற்கு விதிவிலக்கல்ல. குத்துச்சண்டை, மல்யுத்தத்துக்குப் பெயர்போன ஹரியாணாவின் ஜஜ்ஜாரில் பிறந்த மனு, நீச்சல், கராத்தே, ஸ்கேட்டிங், குத்துச்சண்டை என ஒரு ரவுண்ட் அடித்தவர்தான். தற்காப்புக் கலைகளில் பங்கேற்று தேசிய அளவில் பதக்கங்களையும் வென்றவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்