எங்கள் அலுவலகத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் ஒரு நாடக அரங்கமும் திரையரங்கமும் இருந்தன. ஆனால், எந்தக் காட்சியாக இருந்தாலும், அது ஏழு மணிக்குத்தான் தொடங்கும். எங்கள் அலுவலகமோ ஆறு மணிக்கெல்லாம் முடிந்துவிடும். இடைப்பட்ட ஒரு மணி நேரத்தைக் கழிப்பதற்காக, சுற்று வட்டாரத்தில் வாகன நடமாட்டம் இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் கால் போன போக்கில் வேடிக்கை பார்த்தபடி நடப்பேன். காட்சிக்கான நேரம் நெருங்கியதும் எங்காவது ஒரு கடையில் காபி அருந்திவிட்டு, அரங்கத்துக்குத் திரும்பிவிடுவேன்.
ஒருநாள் குடியிருப்புச் சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, தற்செய லாக ஒரு வீட்டின் தோற்றம் கண்ணைக் கவர்ந்தது. சுற்றுச்சுவரிலிருந்து ஐந்தாறடி இடைவெளியோடு அந்த வீடு கட்டப்பட்டிருந்தது. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் விதவிதமான பூச்செடிகள் நின்றிருந்தன. வீட்டைச் சுற்றி மட்டுமல்ல, வீட்டு மாடியிலும் ஒரு தோட்டம் இருந்தது. அங்கும் ஏராளமான செடிகள்!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்