சமூகப் பொறியாளர்கள் - 6: சென்னையின் ‘அன்னபூரணி’

By ஆர்.சி.ஜெயந்தன்

பெருநகரச் சென்னையில் ஜமீன் பல்லாவரத்தை ஒட்டியிருக்கிறது கீழ்க் கட்டளை. அங்கேதான் இருக்கிறது ‘தவமொழி ஃபவுண்டேஷன் அன்னதானக் கூடம்’. பகல் 12.15 மணிக்கெல்லாம் சேவை தொடங்கிவிடுகிறது. உமாராணியும் அவருடைய தன்னார்வலர்கள் நான்கு பேரும் வட்டமாக நறுக்கப்பட்ட வாழை இலையுடன் கூடிய தட்டுகளில் உணவைக் கொடுக்கிறார்கள். வரிசையில் வரும் அப்பகுதியின் எளிய மக்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள், முதியோர் எனப் பல தரப்பினரும் தேவைக்கு ஏற்ப கேட்டு வாங்கி உண்டபின், நிம்மதியாகச் செல்கிறார்கள். பிற்பகல் 3 மணி வரை சுமார் 380 பேர் சாப்பிட்டிருந்தார்கள்.

பல்லாவரத்தைச் சேர்ந்த அன்பரசன், “நாங்க 6 பேர் இங்கே வருவோம். 15 வருஷமா பெயிண்ட் வேலை செய்றோம். பல்லாவரம், கீழ்க்கட்டளை ஏரியாலயே வாரத்துல 4 நாளாவது வேலை கிடைச்சுடும். 600 ரூபா நாள் சம்பளம். இதுல 50 ரூபா வேலை கொடுக்கிற மேஸ்திரிக்குக் கொடுத்துடணும். காலையில் 9 மணிக்கு பிரெஷ் பிடிப்போம். பட்டி பார்க்கிற வேலை இன்னும் கஷ்டம். வேலை செய்ய ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே பசிக்கும். ஒரு டீ 12 ரூபா, ஒரு வடை 8 ரூபா. 20 ரூபா காலி. மதியம் சாப்பிட்டாத்தான் 6 மணி வரைக்கும் வேலை ஓடும். மதியச் சாப்பாடு ரோட்டுக் கடையில 60 ரூபா. ஒட்டல்லனா அளவு சாப்பாடு 80 ரூபா. வயித்தக் கட்டினா வேலை செய்ய முடியாது. இப்போ உமாராணி அக்கா போடுற சாப்பாடு எங்கள மாதிரி உழைக்கிற ஆளுங்களுக்குப் பெரிய உதவிங்க. குடிகாரன் எவனும் இங்க வார மாட்டான். ஏன்னா, ‘குடிச்சு அழியிற எவனும் இங்கே வராதீங்க. உழைச்ச காசை வீட்டுக்குக் கொடுக்கிறவங்க எப்ப வேணா வந்து வயிறாரச் சாப்பிட்டுப் போங்க’ன்னு ராணி அக்கா சொல்வாங்க. ஒரு தடவை நான் சாப்பிட்டுவிட்டு அவங் களைக் கையெடுத்துக் கும்பிட்டேன். ‘இந்த மாதிரிக் கும்பிடறதா இருந்தா இங்க வராதீங்க. உங்க தங்கச்சி, அக்கா, அம்மா வீட்ல கை நனைக்கிறதா நினைச்சி இங்க வாங்க. நீங்கள்லாம் எனக்குச் சொந்தம். என் வீட்டுக்குச் சாப்பிட வர்ற கடவுள்’ன்னு சொன்னதும் அழுதுட்டேன். அக்கா கையால நல்ல சோறு துன்றதுக்காக இங்கே வாரோம்” என்று சொல்லும்போதே அவரின் கண்கள் கலங்கிவிட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE