சுபலட்சுமியின் திருமணத் துக்கு வரன் தேடியபோது இருவீட்டாரும் ஜாதகங்களைப் பரிமாறிக்கொண் டார்கள். நினைத்துப் பார்க்கவே முடியாத மகிழ்ச்சியான பெருவாழ்வும் எதிர்காலமும் மணமகளுக்கு அமையும் எனச் சோதிடர் கணித்துச் சொன்னதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்கு மாப்பிள்ளையைப் போலவே ஆயுள் குறைவு என்பது வெகுவிரைவிலேயே அந்தக் குடும்பத்துக்குப் புரிந்தது.
கைம்மை நிலையின் கொடுமை சுபலட்சுமியின் சித்தி அறியாதது அல்ல. மழிக்கப்பட்ட தலையும் வெளிறிய கைத்தறிப் புடவையால் முக்காடிட்ட முகமுமாகச் சமையலறைக்குள்ளேயே முடிந்துபோகிற கொடுவாழ்வு அது என்பதை அனுபவித்துக் கொண்டி ருப்பவர்தானே அவர். நாவின் சுவை அரும்புகள் தங்கள் வேலையை மறந்துவிடுகிற அளவுக்கு உணவுக் கட்டுப்பாடும் உண்டு. ஊறுகாயும் வெற்றிலைப்பாக்கும்கூட அவர்கள் தொட முடியாத உயரத்தில் இருந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்