வானவில் பெண்கள்: பார்வையை மாற்றிய போர்

By வா.ரவிக்குமார்

உக்ரைனில் கால்நடை மருத்துவம் படிப்பதற்குச் சென்று, போர்ச்சூழலால் நாடு திரும்பியிருக்கிறார் திருநங்கை கர்த்தா. அதுவரை செய்திகளில் மட்டுமே பார்த்தறிந்த போரை மிக அருகில் இருந்து பார்த்தது வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றியதாகச் சொல்கிறார். அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து பத்து வீடுகள் தாண்டி இருந்த குடியிருப்புகள் குண்டுகளால் தரைமட்டமான போது போரின் தீவிரமும் கொடூரமும் கர்த்தாவுக்குப் புரிந்தது.

“போர் என்றால் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மக்கள் நடமாட்டமில்லாத பகுதிகளில் மட்டுமே நடக்கும் என்று நினைத்தேன். அதிகம் போனால், ராணுவத் தளவாடங்கள், ராணுவ முகாம்களின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று நினைத்தேன். ஆனால், குடிமக்களின் வாழ்விடங்களின் மீதும் குடிமக்களின் உயிர் காக்கும் மருத்துவமனைகளின் மீதும் தாக்குவார்கள் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. உணவு, நீர், மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாமல் சுரங்கத்தினுள்ளேயே ஸ்லோவாகியா எல்லைவரை சென்று, அங்கிருந்து இந்திய அரசின் உதவியால் இந்தியா திரும்பும்வரை உயிர் என்னிடத்தில் இல்லை” என்று கர்த்தா சொல்கிறபோது அந்நாளின் படபடப்பு அவரது வார்த்தைகளில் தெரிகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE