சேதி தெரியுமா? | கஞ்சன்ஜங்கா ரயில் விபத்து முதல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணம் வரை

By தொகுப்பு: மிது

ஜூன் 15: சாகித்ய அகாடமியின் 2024ஆம் ஆண்டுக்கான ‘பால புரஸ்கார்’ விருது ‘தன்வியின் பிறந்த நாள்’ என்கிற சிறார் கதைத் தொகுப்புக்காக யூமா வாசுகிக்கும் ‘யுவ புரஸ்கார்’ விருது ‘விஷ்ணு வந்தார்’ என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக லோகேஷ் ரகுராமனுக்கும் அறிவிக்கப்பட்டது.

ஜூன் 15, 16: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் அறிவித்தன.

ஜூன் 17: திரிபுரா தலைநகர் அகர்தலாவிலிருந்து மேற்கு வங்கத்தின் சீல்டா நகருக்குச் சென்ற கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர்.

ஜூன் 17: வயநாடு தொகுதி எம்.பி. பதவியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என்றும் அத்தொகுதியில் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

ஜூன் 19: நீட் தேர்வில் 0.001% அலட்சியம்கூட இருக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஜூன் 19: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயம் வாங்கி குடித்தவர்களில் 3 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

ஜூன் 20: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக கேரள உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ். மணிகுமாரை நியமித்து ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டார்.

ஜூன் 20: பீஹாரில் 65% இடஒதுக்கீடு நடைமுறையை அந்த மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது.

தொகுப்பு: மிது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்