பாலஸ்தீனத்தின் நினைவில் ஆறாத காயங்களை விட்டுச்சென்ற கரிய வருடம் 1948. அந்த வருடத்தில்தான் ‘நக்பா’ (Nakba) எனப்படும் இனப் பேரிழப்புச் சம்பவம் அங்கு நடைபெற்றது. நக்பா குறித்துத் தெரிந்துகொள்வதற்கு காலத்தின் முன் அத்தியாயங்களுக்கு நாம் நகர வேண்டும். 1917இல், முதல் உலகப் போரின்போது, யூத சியோனிசப் படையின் ஆதரவுடன் பாலஸ்தீனத்தில் கோலோச்சிக்கொண்டிருந்த ஒட்டோமான் பேரரசை பிரிட்டிஷ் அரசு வீழ்த்தியது.
அதற்குப் பிரதியுபகாரமாக, பாலஸ் தீனத்தில் யூத மக்களுக்கான ஒரு தாயகத்தை நிறுவுவதற்கு உதவுவதாக பல்ஃபோ பிரகடனத் தின்கீழ் (Balfour Declaration) அளித்திருந்த உறுதிமொழியைப் பிரிட்டிஷ் அரசு நடை முறைப்படுத்தியது. இதன் வாயிலாக, முதலாம் உலகப் போரில் தன்னுடன் பங்கேற்கும் நேச நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் வாழும் யூதர்களின் பரந்த ஆதரவைப் பெற முடியும் என்பது செயல்திட்டம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்