வண்ணக் கிளிஞ்சல்கள் - 9: கல்லையும் கரையவைக்கும் இசை

By பாவண்ணன்

கன்னங்கரிய சுவரில் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த முருகன் படத்தை “முருகா முருகா” என்றபடி தொட்டுக் கும்பிட்டு விட்டு, விழிமூடி நின்றார் அவர். பிறகு வேறோர் ஆணியில் தொங்கிய துணி உறையிலிருந்து நாகஸ்வரத்தை வெளியே எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார். கொடியில் கிடந்த ஒரு துணியை எடுத்து அக்குழலைத் துடைத்தார். இரண்டு, மூன்று சீவாளிகளை எடுத்துப் பொருத்தி வாசித்துப் பார்த்து, மனதுக்கு இசைவாகப் பொருந்தி வந்த சீவாளியோடு வெளியே வந்தார்.

அவர் புறப்பட்டதைக் கவனித்ததும் குடிசைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஓடிவந்து, “அப்பா, எனக்கு இட்லி” என்றாள். அவளோடு சேர்ந்து ஓடிவந்த அவளைவிடச் சிறிய சிறுமி, “எனக்கு மசால் தோசை” என்று சிரித்தாள். அவர்களைவிட வயதில் குறைந்த சிறுவன் முன்னால் வந்து, “ரெண்டு வடை வேணும் எனக்கு” என்று விரல்களைப் பிரித்துக் காட்டினான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE