வணிகவழி வேளாண் சுற்றுலா - 12: வேளாண் சுற்றுலாவும் சுற்றுச்சூழலும்

By முனைவர் செ.சரத் 

வேளாண் சுற்றுலாவானது சுற்றுச் சூழலை தாங்கிப்பிடித்து அழகு பார்க்கும் ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், இன்னும் சொல்லப்போனால் ‘யாதும் ஊரே’ எனும் கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு அர்த்தம் சேர்த்து யாவரும் உறவினர் என்பதை சொல்லாமல் சொல்கிறது. இங்கு யாவரும் உறவினர் என்பது ‘மொழி இல்லை மதம் இல்லை’ என சுற்றித் திரியும் குருவிகள் முதல் வானத்தையே எட்டிப் பிடிக்கும் புல் பூண்டு வரை நீக்கமற நிறைந்து இருக்கும் பல்லுயிர் பெருக்கம் ஆகும்.

கிராமத்து வாசலை பசுமை போர்த்திய கொடிகள் கொண்டு, கமழும் பூ வாசத்துடன் வசந்தம் வீச சுற்றுலாவாசிகளை வரவேற்பதில் கை தேர்ந்தது வேளாண் சுற்றுலா ஆகும். வேளாண் சுற்றுலா பண்ணைகள் குறிப்பாக காடுகளுக்கு அருகிலும், பாதுகாக்கப்பட்ட இடங்களிலும் அமைந்து இருக்கும் பட்சத்தில் பல்லுயிர் பெருக்கம் மற்றும் இயற்கை வழி முறைகள் காக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணத்துக்கு சில வேளாண் சுற்றுலா பண்ணைகளில் அரிய வகை மரங்கள், மூலிகை தாவரங்கள் மற்றும் இன்னபிற உயிரினங்கள் காக்கப்பட்டு பராமரிப்புடன் இருப்பதையும் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அத்துடன் வேளாண் சுற்றுலாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தும் வழிகளும் உள்ளனு. அதாவது சூரிய மின்தகடுகளை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வது, சாணம் மூலம் எரிவாயு உற்பத்தி செய்வது போன்றவற்றை கூறலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE