ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்தவர்களில் பலருக்கு தொடர்ந்து தவணையை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறு தவணையை தொடர்ந்து செலுத்த முடியாமல் போனவர்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி தொகை காப்பீட்டு நிறுவனங்களில் முடங்கி விடுகின்றன.
இதில் வெகுசிலர் மட்டுமே பாலிசியை சரண்டர் செய்து செலுத்திய தவணையில் சிறு பகுதியை திரும்பப் பெறுகின்றனர். மிகவும் குறைவாக உள்ள சரண்டர் மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்பது பாலிசிதாரர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், அண்மையில் வெளிவந்துள்ள இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) சரண்டர் மதிப்பு தொடர்பான அறிவிப்பு காப்பீட்டு நிறுவனங் களுக்கு மகிழ்ச்சியையும் பாலிசிதாரர்களுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்