தமிழ் இனிது - 35: இலக்கணத்தை மீறிய இரட்டைக்கிளவி?

By நா.முத்துநிலவன்

வல்லியும் வள்ளியும்: வள்ளி, வல்லி இரண்டும் ஒன்றல்ல. எனினும் இவற்றின் வேறுபாடு பற்றி விளக்க வேண்டினார் முனைவர் கு.தயாநிதி. கலப்பையால் மண்ணை உழுதபோது வள்ளிக்கிழங்குடன் கிடைத்த குழந்தையே கு(ன்)றவர் மகள் வள்ளி. ‘வள்ளி திருமணம்’ புகழ்மிக்க மரபுக் கதை.

தமிழ் ‘வள்ளி’, புராணங்களின் வழியாக ‘வல்லி’ ஆனார். வல்லி, வலிமையான கொடி. காமவல்லி (கற்பகத் தருவில் படரும் கொடி), மரகதவல்லி (தரும தேவதை/பார்வதி) போலும் பெண் தெய்வங்கள் பல. ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ என்பது பக்திப் பாடல். ‘இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தா, இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்’ – பட்டுக்கோட்டையாரின் காதல் பாடல்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE