பெண் எனும் போர்வாள் - 20: அதிகாரத்தின் துணையோடு அரங்கேறும் குற்றங்கள்

By பிருந்தா சீனிவாசன்

நம்மைச் சுற்றி நிகழும் பெரும்பாலான குற்றங்களை இயல்பானவையாக ஏற்றுக்கொள்ள நாம் பழக்கப்படுத்தப் பட்டுவிட்டோம். பாலினப் பாகுபாடு தொடங்கி, பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் இயல்பு என நம்புகிறவர்கள் நம்மைச் சுற்றி அதிகம். அதேபோல்தான் பெண்களும் குழந்தைகளும் கடத்தப்படுவதும் அவர்கள் பண்டங்களாக விற்கப்படுவதும் ஆண் மனதின் வக்கிரங்களுக்குப் பலியாக்கப்படுவதும் பலரை அசைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

பண்டங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதைப் போல்தான் ஆள் கடத்தல் வலைப்பின்னலும் செயல்படுத்தப்படுகிறது. முதலில் சம்பந்தப்பட்ட ஆணோ பெண்ணோ குழந்தையோ வாங்கப்படுகிறார்கள் அல்லது கடத்தப்படுகிறார்கள். வாங்கும் விதம் நபரையும் நாட்டையும் பொறுத்து வேறுபடலாம். சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்குப் பணம் கொடுத்து நேரடியாக வாங்கலாம் அல்லது வேலை வாங்கித் தருவதாகவோ வெளியூரில் பள்ளியில் சேர்த்துவிடுவதாகவோ மோசடி செய்து கடத்தலாம். போலியான திருமணங்கள் மூலமும் பலர் கடத்தப்படுகிறார்கள். சிலர் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மனிதர்களைக் கடத்துவது உண்டு. சாலையில் திரியும் குழந்தைகளைக் கடத்துவது, பல நாடுகளில் எளிதான செயலாக இருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் அரசாங்கமே ஆள் கடத்தலுக்கு உறுதுணையாக இருக்கும் கொடுமையும் நடக்கிறது. ஆள் கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், பாலியல் தொழில் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இது பணம் கொழிக்கும் பெரும் வியாபாரமாக இருப்பதால் பல நாடுகள் இதைக் கண்டுகொள்வதில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE