கண்கவர் முள்ளங்கியை அறியாத வர்களும் சுவை உணர்ந்து சாப்பிடாதவர்களும் குறைவு. அதிலும் சுவைமிக்க முள்ளங்கி சாம்பாருக்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், அதன் கீரையை உண வாகப் பயன்படுத்தலாம் என்று அறிந்தவர்கள் வெகு சொற்பமே! புதிதாகப் பறித்த முள்ளங்கியா என்று அறிய, அதன் தலைப் பகுதியில் கீரை உயிர்ப்போடு இருக்கிறதா எனப் பார்த்து வாங்கும் நாம், அக்கீரையை வெட்டித் தூக்கி எறியாமல் உணவு முறைக்குள் சேர்த்துவந்தால் பலன்களோ ஏராளம்!
பஞ்சக் காலத்தில் முள்ளங்கிக் கீரையை உணவாகச் சாப்பிட்ட குறிப்புகள் இருக்கின்றன. வறுமையின் அடையாளமாகக் குறிப்பிடப்பட்ட கீரைகள், உண்மையில் வறுமையின் அடையாளம் அல்ல, நலத்துக்கான குறியீடு என்பதை நாம் புரிந்துகொண்டால் கீரையின் பலன்களை முழுமையாக அனுபவிக்கலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்