நாம் செய்யத் தயங்கும் குறும்பு, ஏளனம், எள்ளல், பிறர் மனம் புண்படாதபடி இகழ்வது உள்ளிட்ட குண மாதிரிகளைக் கொண்டிருக்கும் சாமானியன் ஒருவனின் பிரதி பிம்பம் என்றால் வைகைப் புயல் வடிவேலு நம் நினைவுக்கு வந்துவிடுவார். தமிழ் சினிமாவில் என்ன செய்தாலும் ரசிக்கும்படியாக செய்வதில் இப்போது வரை முன்னோடியாகத் திகழ்கிறார். செய்யும் சேட்டை எதுவாயினும் அதை, அருவெறுப்பில்லாமல் செய்து சிரிக்க வைத்து விடுவார். ஆசான்களைப் போல் நாடகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றுடன் வறுமையும் வடிவேலுவுக்குக் கற்றுத் தந்தது. எவ்வித அலங்காரப் பூச்சும் இல்லாமல், நகைச்சுவை உணர்வை அவர் நமக்குக் கடத்தும் விதம், ஓர் இசையமைப்பாளர் செய்யும் ஜாலத்தைப் போன்றது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்