பெண் எனும் போர்வாள் 10: கைகூடிய மருத்துவமனை கனவு

By பிருந்தா சீனிவாசன்

முத்துலட்சுமியின் தங்கை புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி வலியோடும் வேதனையோடும் அவரது கண் எதிரிலேயே உயிர் துறந்தது அவரை வெகுவாகப் பாதித்தது. அதன் தொடர்ச்சியாகவே புற்றுநோய்க்குச் சிறப்பு மருத்துவமனை அமைக்க அவர் உறுதிபூண்டார். முத்துலட்சுமியின் கணவர் சுந்தரத்தின் மறைவுக்குப் பிறகு சுந்தரத்துக்கு வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியத்தொகையும் நிறுத்தப்பட்டுவிட, வீட்டு வாடகை மட்டுமே ஒரே வருமானமாக இருந்தது. அந்தத் தொகையை வைத்துக்கொண்டு புற்றுநோய் மருத்துவமனையை எப்படிக் கட்டியெழுப்புவது?

முத்துலட்சுமி தான் சார்ந்திருந்த இந்தியப் பெண்கள் சங்கத்தின் உதவியை நாடினார். மேலும் சில பெண்கள் அமைப்புகளும் இணைய, பொது நிதி திரட்ட முடிவானது. அமெரிக்காவில் மருத்துவ மேற்படிப்பு முடித்துத் திரும்பிய தன் மகன் கிருஷ்ணமூர்த்தியையும் இந்த நிதி திரட்டும் பணியில் முத்துலட்சுமி இணைத்துக்கொண்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE