பச்சை வைரம் 08: மழைக்காலத்துக்கு உகந்த தூதுவளை 

By டாக்டர் வி.விக்ரம்குமார்

‘தனித்து ஒளிரும் கரும் பச்சை இலைகள், கண்களைக் கவரும் ஊதா மலர்கள், உருண்டை வடிவத்தில் செவ்விய பழங்கள், சிறு சிறு முட்களைக் கொண்டிருக்கும் முள்சூழ் தேகம்…’ என வித்தியாசமான அமைப்புடன் மழைக்காலங்களில் தானாக முளைத்து மிளிரும் கீரை தூதுவளை. சீன, தமிழ் மருத்துவத்தில் சிறப்பு வாய்ந்த கீரை தூதுவளை. உணவாகவும் மருந்துகளின் அடிப்படைப் பொருளாகவும் பயன்படும் மருத்துவக் கீரையாகத் தூதுவளை வழக்கத்தில் இருக்கிறது. வெண்ணிற மலர்களைக் கொண்ட வெண் தூதுவளை வகையும் உண்டு. கார்ப்புச் சுவை, சிறிதளவு கைப்புச் சுவையை உடலுக்கு வழங்கும் கீரை இது.

உணவாகப் பயன்படுத்தினால் நோய்களைத் தகர்த்தெறிவதற்கான வெப்பத்தையும் உடலுக்குச் சுறுசுறுப்பையும் தூதுவளை கொடுக்கும். ‘தூதுவளைக் கீரை உணவின் சுவையைக் கூட்டும்’ என்கிறது தேரையர் குணவாகடப் பாடல். ஆதலால், உணவில் விருப்பமில்லாமல் தவிப்பவர்கள் சாப்பிட வேண்டிய முதல் கீரை ரகம் இது. மழைக்காலத்தில் பாடாகப்படுத்தும் சளி, இருமலின் தீவிரத்தைக் குறைக்க தூதுவளை ரசம் விட்டுப் பிசைந்த சாதத்துக்குத் தொடு உணவாகத் தூதுவளை துவையல் போதும். காலத்துக்கேற்ற உணவு முறையில், மழைக்காலத்துக்கான உணவுப் பட்டியலில் முதன்மையாக இடம்பிடிக்க வேண்டிய கீரை தூதுவளை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE