திருநம்பியும் திருநங்கையும் - 07: வளர்ந்தால் சரியாகிவிடும் பிரச்சினையா இது?

By சுதா

இப்போல்லாம் எங்கப்பா நல்லா குடிக்கிறார். ஒருநாள் நல்ல போதையில, “நான் குடிக்கிறதுக்கு நீயும் ஒரு காரணம்டா”ன்னு என்னைய சொன்னாரு.நான் ஏன் காரணம்? இவர் ஏதோ குடிச்சிட்டு உளறுறாருன்னு நெனைச்சிப்பேன். எங்க அண்ணனும் ஒருமுறை, “நீ ஒழுங்கா நடடா. ரோட்ல போகும்போது ஏன்டா குனிஞ்சிக்கிட்டே போறே?”ன்னு கேட்டான். வேற எப்படி போறது? சுத்த அறிவு கெட்டவன். அக்காவைக் கேக்காம என்ன மட்டும் கேக்குறான்.

என்னைக்குதான் இவங்களுக்கு அறிவு வரப் போவுதோ. எனக்கு எங்கம்மா கவலை அதிகமா இருக்கு. எங்கப்பா வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்குறது இல்லைன்னு, எங்கம்மா ஒரு வீட்டுக்கு வேலைக்குப் போகுது. அங்க கொடுக்குற மீந்த சாப்பாட்டை எங்களுக்குக் கொண்டு வந்து கொடுக்கும். “அம்மா நான் பாத்திரத்துக்கு சோப்பு நார் போடுறேன். நீ அந்தப் பக்கம் உட்கார்ந்து விளக்குமா”ன்னு சொன்னா, “வேணாம்பா. நீ போ வீட்டுக்கு”ன்னு அம்மா சொல்லும். நான் போக மாட்டேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE