காலநிலை நீதியும் பாலினச் சமத்துவமும்!

By ராகா

உலகத்தின் ஒரு பக்கம் வெப்பம் அதிகரிப்பதும் மறு பக்கம் அதிக மழை பொழிவதும் வெள்ள பாதிப்பு ஏற்படுவதுமான நிகழ்வுகள் நடந்துவருகின்றன. இதற்குக் காலநிலை மாற்றம்தான் காரணமென விஞ்ஞானிகள் சொல்கின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் ஓர் எச்சரிக்கை என்றாலும் இதனால் பெண்கள், விளிம்புநிலை மக்கள், பால்புதுமையினர் ஆகியோர் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் பங்களிப்பு: காலநிலை நீதியும் பாலினச் சமத்துவமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவ. இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் சென்னையில் சமீபத்தில் இரண்டு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் ஐந்து தென் மாநிலங்களைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். காலநிலை விவாதங்களில் பெண்களின் பங்களிப்பு பற்றியும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பற்றியும் இப்பயிலரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE