1973-ம் ஆண்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் உலகளவில் கார் பகிர்வு சவாரி மிகவும் பிரபலமானது. அலுவலகம் உள்ளிட்ட ஒரே இடத்தை நோக்கி பயணிக்க நினைப்பவர்கள், காரின் இருக்கைகளை பகிந்து கொள்வது கார்பூலிங் (carpooling) என்று அழைக்கப்படுகிறது. காரில் காலியாக இருக்கும் இருக்கைகளை பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு நபரின் பயணச் செலவு என்பது கணிசமாக குறைகிறது. குறிப்பாக, எரிபொருள், சுங்கச் சாவடி கட்டணம் ஆகியவற்றை காரில் இருக்கும் அனைவரும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
அத்துடன், வாகனத்தை ஒருவரே ஓட்டும்போது ஏற்படும் மன அழுத்தமும் தடுக்கப்படுகிறது. இதற்கு, அந்த காரில் பயணிக்கும் மற்றவர்களும் ஓட்டுநர் பணியை பகிர்ந்து கொள்வது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்